சிறீலங்காவில் திடீரென தொலைக்கப்பட்ட ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட தான் உறுது பூண்டுள்ளதாகவும் அதுபோல் ;படையில் உள்ளவர்களும் உறுதிகொள்ளவேண்டும் என சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதியும் தற்போது சிறீலங்காவில் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.சிறீலங்காவின் அரசுத் தலைமைக்கும் சரத் பொன்சோகவுக்கும் இடையில் ஏற்பட்ட முறகல் நிலையை அடுத்து தனது படைகளின் பிரதானி என்னும் உப்புச்சப்பற்ற பதவியை துறந்த சரத் பொன்சேகா தனது பிரியாவிடை கடித்தில் தான் இனி ஜனநாயத்தை கட்டியெழுப்ப பாடுபட உள்ளதாகவும் கெட்டுப்போயுள்ள மனித உரிமைகள் ஊடக சுதந்திரம் நடமாடும் சுதந்திரம் சமூக நலன் இன ஒற்றுமை மற்றும் நீடித்த சமாதானத்தை கட்டியெழுப்ப பாடுபடஉள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பை சரத் பொன்சேகாவைக் கொண்டு சிங்கள இளவாதிகள் பயங்கரவாத்துக்கு எதிரான போர் என்னும் போர்வையில் சர்வதேச ஆதரவுடன் நிகழ்த்தியதும் பின்னர் ஏற்பட்ட முறகல் நிலையை அடுத்து சிறீலங்காவில் அரசியல் தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளமையும் தெரிய வந்துள்ள நிலையில் வன்னியில் நடந்த தமிழ் மக்கள் அழிப்பு போர் பற்றிய பல செய்திகள் சில நாடுகளின் துணையுடன் மூடி மறைக்கப்பட்டு வந்தன.ஆத்துடன் சிறீலங்காவும் பல நாடுகளின் உதவியுடன் அவற்றை மூடி மறைத்து பரப்புரைகள் செய்து வந்ததுஆனால் சரத் பொன்சேகாவின் இவ் கூற்று மூலம் சிறீலங்காவில் மனித உரிமை மற்றும் ஊடக சுதந்தஜரம் கெட்டுப்போய் உள்ளது உறுதியாகியுள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

